வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த மாண்டஸ் புயல் நேற்று இரவு கரையை கடந்தது.
வங்கக்கடலில் கடந்த ஐந்து நாட்களாக சுழன்று கொண்டிருந்த 'மாண்டஸ்' புயலானது நேற்று இரவு 9:30 மணிக்கு கரையை கடக்க துவங்கியது. புயலின் முன்புற பகுதி நிலத்திற்குள் நுழைந்ததும் சூறைக் காற்றுடன் பல இடங்களில் கன மழை பெய்தது. புயலின் மையப் பகுதியானது நேற்று இரவு 12:00 மணிக்கு மாமல்லபுரத்திலிருந்து மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கரையை கடந்தது.
மாமல்லபுரம், கோவளம், நீலாங்கரை, பட்டினப்பாக்கம், உத்தண்டி, மெரினா உட்பட மீனவர்கள் வசிக்கும் கடலோரப் பகுதிகளின் தாழ்வான இடங்களில் கடல் நீர் புகுந்தது. கடலோரப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் துாக்கி வீசப்பட்டன. கரையை கடந்த போது மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. புயல் கரையை கடந்த பின்னும் 3 நாட்களுக்கு மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.