மகளிர் சுய உதவிக் குழுவின் உணவுத் திருவிழா சென்னையில் வெற்றிகரமாக நடைபெற்றது.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 20-ந்தேதி தொடங்கிய மகளிர் சுய உதவிக் குழுவின் உணவுத் திருவிழா பெரிய வெற்றியைக் கண்டுள்ளது. இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து உத்திரமான பாரம்பரிய சைவ மற்றும் அசைவ உணவு வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டன.
இந்த திருவிழாவில் 286 வகையான உணவுகளை மக்கள் விரும்பி வாங்கி சாப்பிட்டனர். இந்த நிகழ்வில் 3.20 லட்சம் மக்கள் கலந்துகொண்டு, ரூ.1.50 கோடி மதிப்பிலான உணவுகள் மற்றும் பொருட்களை வாங்கினர். 45 அரங்கங்களில் சைவ, அசைவ உணவுகள் மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.