இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுசுகி, இக்நிஸ் வகை கார்களின் விலையை உயர்த்தியுள்ளது. கிட்டத்தட்ட 27000 ரூபாய் வரை விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. மேலும், இது பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்நிஸ் வகை வாகனங்களில் பல்வேறு புதிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோகிராம் மற்றும் ஹில் ஹோல்டு அசிஸ்ட் உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏப்ரல் மாதத்தில் கொண்டுவரப்பட உள்ள இ 20 ஒழுங்குமுறைக்கு ஏற்றதாகவும் இந்த வாகனம் உள்ளது. எனவே, விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 9 நிறங்களில் வெளிவரும் இந்த இக்நிஸ் ரக வாகனங்கள் விலை 5.5 லட்சத்திலிருந்து தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.