மாருதி சுஸுகி நிறுவனம், உற்பத்தி செலவுகள் அதிகரித்து வருவதால், வரும் ஜனவரி 2025 முதல் தனது கார்களின் விலையை 4% வரை உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, நிறுவனத்தின் பங்குகள் 1% உயர்ந்துள்ளன. இந்த ஆண்டு மட்டும், மாருதி சுஸுகி பங்கு 20% வளர்ச்சியைக் கண்டுள்ளது.
ஆய்வாளர்களின் கணிப்பின்படி, 2024-27 நிதியாண்டுகளில் மாருதி சுஸுகியின் விற்பனை வருவாய் ஆண்டுக்கு 6% என்ற விகிதத்தில் வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு கிராமப்புறங்களில் கார் வாங்குவோர் அதிகரித்தது, புதிய கார் மாடல்கள் அறிமுகம் செய்யப்படுவது மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன்கள் போன்ற காரணங்கள் துணை புரிகின்றன.