மாருதி சுசுகி கார் விலைகள் வரும் ஜனவரி முதல் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணவீக்கம் காரணமாக பல்வேறு உற்பத்தி பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. இதனை எதிர்கொள்ளும் விதமாக, கார்களின் விலைகளை உயர்த்த திட்டமிட்டு உள்ளதாக மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. கார் மாடல்களுக்கு ஏற்ப விலை உயர்வில் மாற்றங்கள் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட எத்தனை சதவீதம் விலை உயர்வு இருக்கும் போன்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் வரலாற்று உச்ச விற்பனையை பதிவு செய்த மாருதி சுசுகி நிறுவனம், தற்போது விலை உயர்வை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.