அடுத்த கல்வியாண்டு முதல் இந்தியில் மருத்துவப்படிப்பு: உத்தரகண்ட் மருத்துவக் கல்வி அமைச்சர்

November 5, 2022

உத்தரகண்ட் மாநிலத்தில் அடுத்த கல்வியாண்டில் இருந்து இந்தி மொழியில் மருத்துக் கல்வி பயிற்றுவிக்கப்படும் என்று அம்மாநில மருத்துவக்கல்வி அமைச்சர் தன் சிங் ராவத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் தன் சிங் ராவத் கூறுகையில், மத்திய அரசு இந்தி மொழிக்கு சிறப்பு கவனம் செலுத்தி வருவதை கருத்தில் கொண்டு, மாநிலத்தில் மருத்துவக் கல்வியை இந்தி மொழியில் பயிற்றுவிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, பவுரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீநகர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் - மருத்துவர். சிஎம்எஸ் ராவத் தலைமையில் […]

உத்தரகண்ட் மாநிலத்தில் அடுத்த கல்வியாண்டில் இருந்து இந்தி மொழியில் மருத்துக் கல்வி பயிற்றுவிக்கப்படும் என்று அம்மாநில மருத்துவக்கல்வி அமைச்சர் தன் சிங் ராவத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் தன் சிங் ராவத் கூறுகையில், மத்திய அரசு இந்தி மொழிக்கு சிறப்பு கவனம் செலுத்தி வருவதை கருத்தில் கொண்டு, மாநிலத்தில் மருத்துவக் கல்வியை இந்தி மொழியில் பயிற்றுவிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, பவுரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீநகர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் - மருத்துவர். சிஎம்எஸ் ராவத் தலைமையில் நான்கு பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மத்தியப்பிரதேச மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில், இந்தியில் உள்ள மருத்துவப்படிப்பிற்கான பாடத்திட்டங்களை இந்தக்குழு நன்றாக ஆய்வு செய்து, புதிய பாடத்திட்டத்தை உருவாக்கும். இதையடுத்து, அந்த பாடத்திட்டத்தை ஏற்பதற்கான நடைமுறைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு, அடுத்த கல்வியாண்டில் இருந்து மாநிலத்தில் இந்தியில் மருத்துவப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படும் என தெரிவித்தார்.

திட்டத்தின் ஒரு பகுதியாக, மருத்துவப்படிப்புகளுக்கான இந்தி பாட நூல்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த அக்.16ம் தேதி வெளியிட்டார். உத்தரகண்டில் அடுத்த கல்வியாண்டு முதல் மருத்துவப்படிப்புகள் இந்தியில் வழங்கப்படுமானால், இந்தியில் மருத்துவப்படிப்புகளை வழங்கும் இரண்டாவது மாநிலம் என்ற பெயரை உத்தரகண்ட் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu