சென்னை உயர்நீதிமன்றம் அதிமுகவிற்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத் தேர்தலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தங்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணையில் ஒரு தொகுதியில் போட்டியிடுவதால் சின்னம் ஒதுக்க முடியாது என்றும், ஒரே மாநிலத்தில் இரு தொகுதிகளில் போட்டியிட்டால்தான் ஒதுக்கீடு சின்னம் ஒதுக்க முடியும் என்ற தேர்தல் ஆணைய உத்தரவு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி அங்கீகாரம் ரத்தாகும் பட்சத்தில் சின்னத்தை பொது சின்னமாக தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும். ஆனால் பம்பரம் பொதுச்சின்னமாக அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மற்ற மாநிலத்தில் மேலும் ஒரு தொகுதியில் போட்டியிட தயாராக உள்ளதாக மதிமுக சார்பில் கூறப்பட்டது. ஆனால் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் உத்தரவு பிறப்பிக்க முடியாது என உயர்நீதிமன்றம் கூறி வழக்கை முடித்து வைத்தது.