தேசிய மருத்துவ ஆணையம், தமிழ்நாட்டில் உள்ள 3 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு வந்த அங்கீகாரத்தை கடந்த வாரம் ரத்து செய்தது. தற்போது, அந்த 3 மருத்துவமனை கல்லூரிகளும் செயல்பட அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனை, தருமபுரி அரசு மருத்துவமனை மற்றும் திருச்சி விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய 3 மருத்துவக் கல்லூரிகளுக்கும் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. கண்காணிப்பு கேமராக்கள் இல்லாதது, பயோமெட்ரிக் வருகை பதிவு முறையாக செயல்படுத்தப்படாதது, உள்ளிட்ட குறைபாடுகள் காரணமாக அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அங்கீகாரம் ரத்தாவதால், முதலாமாண்டு மாணவர் சேர்க்கை பாதுகாக்கப்படும் என்று கருதப்பட்டதால், குறைபாடுகள் உடனடியாக களையப்பட்டன. அதன்படி, தேசிய மருத்துவ ஆணைய அதிகாரிகள் மீண்டும் ஆய்வு செய்து, மருத்துவக் கல்லூரிகள் மீண்டும் இயங்க உத்தரவிட்டுள்ளனர்.