தமிழகத்தில் வருகிற டிசம்பர் இரண்டாம் தேதி 100 சட்ட மன்ற தொகுதிகளில் நூறு மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கலைஞர் நூற்றாண்டினை முன்னிட்டு நூறு இடங்களில் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான முகாம்கள் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. அதன்படி தமிழகத்தில் உள்ள 100 சட்டமன்ற தொகுதிகளில் 100 மருத்துவ முகாம்கள் டிசம்பர் இரண்டாம் தேதி நடத்தப்படும் என நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் பயனாளிகளை சந்தித்த தமிழக மருத்துவமனை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் அறிவித்தார். மேலும் இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்.