இந்தியாவின் தனியார் விண்வெளி நிறுவனம் ஸ்கைரூட் ஆகும். இந்த நிறுவனம், முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ராக்கெட் ஒன்றை தயாரித்துள்ளது. விக்ரம் 1 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ராக்கெட்டை நேற்று வெளியிட்டுள்ளது.ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம், நேற்று விக்ரம் 1 ராக்கெட்டை வெளியிட்டுள்ளது. இது, 2024 ஆம் ஆண்டு, விண்ணில் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளது. இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் திறந்து வைத்த ஸ்கைரூட் நிறுவனத்தின் தலைமையகத்தில், இந்த ராக்கெட் வெளியிடப்பட்டது. நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வு பெருமைமிகு தருணம் என ஸ்கை ரூட் நிறுவனத்தின் இணை தோற்றுநர் பரத் தாஹா தெரிவித்துள்ளார். விக்ரம் 1 ராக்கெட், 300 கிலோ எடையுள்ள சுமை பாகங்களை எடுத்துச் செல்ல வல்லது. 3D பிரிண்ட் தொழில்நுட்பத்தில், கார்பன் அடிப்படையிலான பொருட்கள் கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் கிட்டத்தட்ட 7 மாடி கட்டிடத்தை ஒத்ததாகும்.