மெட்டா நிறுவனத்திற்கு வரலாற்று உயர்வு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு தரவுகள் பரிமாற்றம் செய்தது தொடர்பாக, 1.2 பில்லியன் யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐரிஷ் தகவல் பாதுகாப்பு கமிஷன், அட்லாண்டிக் பெருங்கடலை தாண்டி பொதுமக்களின் தரவுகள் பரிமாற்றம் செய்யப்பட்டதால், மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்கு ஏற்பட்ட ஆபத்தாக இதனை குறிப்பிட்டு, அபராதம் விதித்துள்ளது. மேலும், எதிர்காலத்தில் இது போன்ற தகவல் பரிமாற்றத்தை தடுப்பதற்கு, மெட்டா நிறுவனத்திற்கு 5 மாத காலம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
மெட்டா நிறுவனத்திற்கான அபராதம் எதிர்பார்த்த ஒன்றாகவே கருதப்பட்டது. முன்னதாக, ஐரோப்பியர்களின் தரவுகள் பாதுகாப்பாக உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இது குறித்து உறுதி தெரிவித்தார். தொடர்ந்து, அபராதம் குறித்த விவாதங்கள் நடைபெற்றன. ஆனால், அவை தோல்வியில் முடிந்து, இன்று இந்த அபராத தொகை விதிக்கப்பட்டுள்ளது.