சுமார் 22 மில்லியன் மக்கள் தொகையுடன் உலகின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக மெக்சிகோ நகரம் உள்ளது. இந்த நகரத்தில் தண்ணீர் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் நகரமயமாக்கல், பழைய வகை கட்டமைப்பு வசதிகள் மற்றும் புவியியல் சார்ந்த சவால்கள் காரணமாக அந்த நகரத்தில் தண்ணீர் தேவை உயர்ந்து வருகிறது. பல வருடங்களாக போதிய மழை பெய்யாததும், கடந்த சில வருடங்களாக உயர்ந்து வரும் வெப்பநிலையும், இந்த சூழலை மேலும் மோசமாக்கி உள்ளன. இதனால், டே ஜீரோ எனப்படும் நாள் நெருங்குவதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெக்ஸிகோ நகரத்தை சுற்றி பல்வேறு அணைகளில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில், ஒரு மணி நேரம் அல்லது அதற்கு குறைவான சமயத்திற்கு மட்டுமே நகரவாசிகளுக்கு தண்ணீர் கொடுக்கப்படுகிறது. இந்த சூழல் நீடிக்கும் பட்சத்தில், அடுத்த சில வாரங்களில் டே ஜீரோ ஏற்படும் என கருதப்படுகிறது. உள்ளூர் ஊடகம் ஒன்று, ஜூன் 26 ஆம் தேதி மெக்சிகோ நகரத்தின் டே ஜீரோ நிகழலாம் என தெரிவித்துள்ளது.