மெக்சிகோ நாட்டில் கருக்கலைப்பு செய்வது குற்றமல்ல என்ற வரலாற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. மேலும், கருக்கலைப்பு உரிமை நாடு தழுவிய முறையில் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது. ரோமானிய கத்தோலிக்க மரபுகள் மேலோங்கி இருக்கும் மெக்சிகோவில், இத்தகைய தீர்ப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, இது மனித உரிமைகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மெக்சிகோ நாட்டில், கருக்கலைப்பு செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். தற்போது, அந்நாட்டின் தண்டனைக்குரிய குற்றங்களில் இருந்து கருக்கலைப்பு நீக்கப்படுகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு, கருக்கலைப்பு தண்டனையை நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களில் இதற்கான உடனடி ஒப்புதல் கிடைக்கவில்லை. தற்போது, நேற்று முதல் கருக்கலைப்பு உரிமை நாடு தழுவிய முறையில் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.