மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சீன ஊழியர்கள் ஆண்ட்ராய்டு கைபேசியை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த செப்டம்பர் மாதம் முதல் அலுவலக வளாகங்களுக்குள் ஆண்ட்ராய்டு கைபேசிகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு மைக்ரோசாப்ட் ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்பு சார்ந்த காரணங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், சீனாவில் பணியாற்றும் மைக்ரோசாப்ட் ஊழியர்கள் அலுவலக வளாகங்களுக்குள் iphone கருவிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், ஆண்ட்ராய்டு கைபேசி பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஊழியர்களுக்கு ஐபோன் 15 கைபேசிகளை மைக்ரோசாப்ட் நிறுவனமே வழங்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.