மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்வெளி துறையில் இயங்கும் இந்திய புத்தாக்க நிறுவனங்களுக்கு உதவுவதற்காக, இஸ்ரோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அண்மையில், மைக்ரோசாப்ட் -ன் எதிர்கால தொழில்நுட்ப மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மைக்ரோசாப்ட் தலைவர் சத்யா நாதெல்லா, இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த ஒப்பந்தம் மூலம், இஸ்ரோவால் அடையாளம் காணப்பட்டு, பரிந்துரைக்கப்படும் புத்தாக்க நிறுவனங்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் உதவிகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்திய விண்வெளி துறையில் வேகமான வளர்ச்சி எட்டப்படும் என்று கூறப்படுகிறது. இஸ்ரோ தலைவர் சோம்நா,த் இந்த ஒப்பந்தம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதன் மூலம், புத்தாக்க நிறுவனங்கள் மிகவும் பயனடையும் என்று கூறியுள்ளார்.