எவரெஸ்ட் மலை ஏற்ற சாகசத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதன் விளைவாக, எவரெஸ்ட் பகுதியில் சேரும் குப்பைகள் அதிகரித்துள்ளது. எனவே, அங்கு சேரும் குப்பைகளை அகற்றுவதற்கான நடவடிக்கையை நேபாள அரசு மேற்கொண்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 11ம் தேதி, நேபாள ராணுவத்தை சேர்ந்த 12 பேர், எவரெஸ்ட் சிகரத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடத் துவங்கினர். அவர்களுக்கு உதவியாக, மலை ஏற்ற பயிற்சி பெற்ற 18 பேர் சென்றனர். கிட்டத்தட்ட 55 நாட்கள் நடைபெற்ற பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், 11 டன் குப்பைகள் எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. மேலும், ஒரு மண்டை ஓடு மற்றும் 5 மனித உடல்கள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.