கடந்த ஏழு ஆண்டுகளாக, விண்டோஸ் 10 இயங்கு தளம் அதிகம் பயன்படுத்தப்படும் இயங்குதளமாக உள்ளது. இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனம், விண்டோஸ் 10 இயங்கு தளத்திற்கான உரிமங்களை வரும் 31ம் தேதி முதல் நிறுத்தவதாக அறிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம், விண்டோஸ் 10 இயங்குதளத்திற்கு பின்னர், விண்டோஸ் 11 என்ற புதிய இயங்கு தளத்தை அறிமுகம் செய்துள்ளது. ஆனால், பலரும் இந்த புதிய இயங்கு தளத்திற்கு இன்னும் மாறவில்லை. எனவே, புதிய இயங்குதளத்திற்கு பயனர்களை அதிகரிக்கும் நோக்கில், விண்டோஸ் 10 உரிமத்தை நிறுத்துவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. மேலும், அக்டோபர் 14, 2025 வரையில், விண்டோஸ் 10 இயங்கு தளம், கணினிகளில் செயல்படும் எனவும் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. அதன் பிறகு, குறிப்பிட்ட சில மேம்படுத்தல்களை மேற்கொண்டால் மட்டுமே விண்டோஸ் 10 செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயனர்களை விண்டோஸ் 11 இயங்கு தளத்திற்கு மாற மைக்ரோசாப்ட் அறிவுறுத்தி உள்ளது.