ஹமாஸ்- இஸ்ரேல் இடையே கைதிகள் பரிமாற்றம் செய்ய கத்தார் பேச்சுவார்த்தை நடத்துகிறது.இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த சனிக்கிழமை திடீர் தாக்குதல் நடத்தினர். அப்போது அவர்கள் பெண்கள், முதியவர்கள், சிறுமிகள் உள்ளிட்டவரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர். பிணைக்கைதிகளாக கொண்டு செல்லப்பட்டவர்கள் நிலை குறித்து எந்த தகவலும் இல்லை. எனினும் தற்போதைக்கு ஹமாஸ் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இதற்கிடையே, இஸ்ரேல் சிறையில் பாலஸ்தீனர்கள் உள்ளனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும். அதே வேளையில் ஹமாஸ் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளவர்களை பயங்கரவாதிகள் விடுவிக்க வேண்டும். இதற்கான பேச்சுவார்த்தையில் கத்தார் அரசு இறங்கியுள்ளது. இந்த முயற்சிக்கு அமெரிக்காவும் ஆதரவு அளித்துள்ளதாக தெரிகிறது. ஆனால் ஹமாஸ் இஸ்ரேல் ஆகியோர் பக்கத்தில் இருந்து இது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
கத்தார் அரசு காசா மற்றும் தோகாவில் உள்ள ஹமாஸ் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து வருவதாக தகவல்கள் வெளிவருகிறது. எனினும், இஸ்ரேல் பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்குமா என்பது இதுவரை உறுதியாக வில்லை. இஸ்ரேல் போரை முடிக்கும் என்று அந்நாட்டு பிரதமர் நேதன்யாகு தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.