இரவில் கைபேசிகளை பார்ப்பதால் நீரிழிவு அபாயம் அதிகரிப்பு - ஆய்வு தகவல்

பொதுவாக, இரவு நேரத்தில் கைபேசிகளை பயன்படுத்துவதால் தூக்கம் கெடுகிறது. தூக்கத்தின் நேரம் மற்றும் கால அளவு குறைவால் பல உபாதைகள் ஏற்படுகிறது. இந்த நிலையில், தூக்க நேரத்தை தவிர்த்து, இரவு நேரத்தில் செயற்கை வெளிச்சத்தை பார்ப்பதால் நீரிழிவு நோய் அபாயங்கள் அதிகரிக்கும் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, டைப் 2 டயாபடீஸ் ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள மோனாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இரவு நேரத்தில் விளக்குகளை அனைத்து கைப்பேசி பயன்படுத்துவதால் ஏற்படும் […]

பொதுவாக, இரவு நேரத்தில் கைபேசிகளை பயன்படுத்துவதால் தூக்கம் கெடுகிறது. தூக்கத்தின் நேரம் மற்றும் கால அளவு குறைவால் பல உபாதைகள் ஏற்படுகிறது. இந்த நிலையில், தூக்க நேரத்தை தவிர்த்து, இரவு நேரத்தில் செயற்கை வெளிச்சத்தை பார்ப்பதால் நீரிழிவு நோய் அபாயங்கள் அதிகரிக்கும் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, டைப் 2 டயாபடீஸ் ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

ஆஸ்திரேலியாவில் உள்ள மோனாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இரவு நேரத்தில் விளக்குகளை அனைத்து கைப்பேசி பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 40 முதல் 69 வயதுடையவர்களை கடந்த 9 ஆண்டுகளாக ஆய்வு செய்து இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 85000 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. அறிக்கையின் படி, இரவு நேரத்தில் கைபேசி பயன்படுத்துபவர்களுக்கு 67% நீரிழிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu