அலாஸ்கா விமான விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வந்துள்ளது.
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள உனலக்ளீட் விமான நிலையத்திலிருந்து நோம் நகருக்கு செஸ்னா 208B விமானம் புறப்பட்டது. பெரிங் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தில் விமானி உட்பட 10 பேர் பயணித்தனர். நார்டன் சவுண்ட் அருகே மலைப்பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக விமானிக்கு இயக்கத்தில் சிக்கல் ஏற்பட்டது. கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ள முயன்றபோதும், விமானம் தொடர்பை இழந்தது விபத்துக்குள்ளானது.
இதையடுத்து, கடைசி சிக்னல் கிடைத்த இடத்தில் மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்றது. ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் நடத்திய மீட்புப் படையினர், விமானம் அலாஸ்கா கடல் பனியில் நொறுங்கி கிடந்ததை கண்டனர். விசாரணையின் பின்னர், 10 பேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதி செய்தனர்.