இன்று தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.இன்றைய சட்டப்பேரவை உரையில், ஆருத்ரா நிதி நிறுவன மோசடி, வேங்கை வயல் விவகாரம், பல்வீர் சிங் விவகாரம் உள்ளிட்டவற்றில் தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் விளக்கமளித்தார். அதைத் தொடர்ந்து, காவல்துறை மானிய கோரிக்கை மீதான 101 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அவற்றுள் சில:
1.சிந்தாதிரிப்பேட்டையில் மகளிர் காவல் விடுதி கட்டப்படும்
2.சென்னையில் 3000 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படும்
3.குற்றவாளிகளை பாதுகாப்பாகவும், சட்ட ரீதியாகவும் கட்டுப்படுத்த, 25 ரிமோட் கைவிலங்கு கருவிகள் (Remote Restraint Wrap) வாங்கப்படும்
4.கிரிப்டோ கரன்சி மோசடிகளை கண்டுபிடிக்க புதிய கருவி வாங்கப்படும்
5.காவலர் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை 30000 ரூபாயாக உயர்த்தப்படும்
6.மாநிலத்தில் 5 இடங்களில் புதிய தாலுகா காவல் நிலையங்கள் அமைக்கப்படும்