இந்தோனேஷியாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
இந்தோனேஷியா நாட்டில் உள்ள பாலி நகரில் வரும் 15, 16ம் தேதிகளில் ஜி20 மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இந்தோனேஷியா செல்கிறார். இது குறித்து வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜி20 மாநாட்டின் தலைமை பதவியை வரும் டிசம்பர் 1ம் தேதி இந்தோனேஷியாவிடம் இருந்து இந்தியா பெறுகிறது.
இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இதில், ரஷ்ய அதிபர் புடின் கலந்து கொள்ள மாட்டார் என்று ரஷ்ய அரசு நேற்று அறிவித்தது. அவருக்கு பதிலாக, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாரோவ் கலந்து கொள்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.