நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி பெற்றுள்ளார்.
நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பிரதமர் மோடி 6 லட்சத்து 12 ஆயிரத்து 970 வாக்குகள் பெற்றார். இவர் எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 4 லட்சத்து 60 ஆயிரத்து 457 வாக்குகள் பெற்றார். இதனிடையே 1 லட்சத்து 52,513 வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் மோடி வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாக வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று காந்திநகர் தொகுதியில் போட்டியிட்டு இருந்த உள்துறை மந்திரி அமித்ஷா 10,10,972 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளரை விட 7,44,716 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் போட்டியிட்ட கங்கனா ரனாவத் 5,37,022 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்