நாட்டின் இரண்டாவது உயர உயரிய விருதாக கருதப்படும் அர்ஜுனா விருது விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான விளையாட்டு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில் நாட்டில் உயரிய விருதாக கருதப்படும் அர்ஜுனா விருதினை முகமது ஷமி க்கு வழங்க பிசிசிஐ விளையாட்டு அமைச்சகத்திடம் பரிந்துரை செய்தது. இது சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை தொடரில் முகமது ஷமி ஏழு இன்னிங்ஸில் 24 விக்கெட் வீழ்த்தினார். மேலும் சிறந்த பந்துவீச்சாக 57 ரன்கள் கொடுத்து ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் அதிக விக்கட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற விருதை ஷமி பெற்றார். .இதனை கருத்தில் கொண்டு விருது பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு அறிவித்துள்ள விளையாட்டு விருதுகள் பட்டியலில் மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது டேபிள் டென்னிஸ் வீரர்களுக்கான சிராக் சந்திர சேகர் ஷெட்டி, சாத்விக் ஜெயராஜ் ஜோடிக்கு வழங்கப்படுகிறது. மேலும் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, பிரக்ஞானந்தாவின் சகோதரி சாய் வைஷாலி உட்பட்ட 26 பேர் அர்ஜுனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.