மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
தெலுங்கானா,மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தெலுங்கானா தவிர்த்து மற்ற இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. இதில் தெலுங்கானாவில் முதலமைச்சராக காங்கிரஸ் வேட்பாளர் ரேவந்த் ரெட்டி பதவி ஏற்றுள்ளார். மேலும் சத்தீஸ்கரில் விஷ்ணு தியோ சாய் தேர்வாகி உள்ளார். தற்போது மத்திய பிரதேசத்தின் புதிய முதல்வராக மோகன் யாதவ் தேர்வாகியுள்ளார். இவர் தெற்கு உஜ்ஜெயின் தொகுதி எம்எல்ஏவாக இருந்தார்.
மேலும் இவர் கடந்த சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசின் கல்வித் துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.