மொனாக்காவில் நடைபெற்று வரும் களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ மாஸ்டர் சர்வதேச டென்னிஸ் போட்டியில் சின்னர் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளார்.
மான்டி கார்லோ மாஸ்டர் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் கால் இறுதி ஆட்டத்தில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், ரஷ்யவீரர் கச்சேனா ஆகியோர் மோதினர். இதில் 6-4,6-2 என்ற நெர்செட் கணக்கில் சிட்சிபாஸ் ரஷ்ய வீரரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இதனை தொடர்ந்து மற்றொரு காலிறுதி போட்டியில் இத்தாலியை சேர்ந்த சின்னர், டென்வர்க் வீரர் ரூனேயுடன் மோதினார். இதில் முதல் செட்டை 6-4 என சின்னர் கைப்பற்றினார். இரண்டாவது சட்டை 7-6 என ரூனே கைப்பற்றினார். அதனை தொடர்ந்து மூன்றாவது செட்டை 6-3 என சின்னர் கைப்பற்றி அரை இறுதி சுற்றிற்கு முன்னேறி உள்ளார்.