பிரிட்டனில் நடத்தப்பட்ட புதிய கருத்து கணிப்பில், பிரதமர் ரிஷி சுனக்கிற்கு மக்களிடம் அமோக ஆதரவு உள்ளது தெரிய வந்துள்ளது.
நவம்பர் மாத அரசியல் நிலவரம் குறித்து இப்சாஸ் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில், பிரதமர் ரிஷி சுனக்கிற்கு ஆதரவாக 47% மக்களும், எதிர்ப்பாக 41% மக்களும் வாக்களித்துள்ளனர். அதே வேளையில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு மக்களின் ஆதரவு குறைந்து காணப்பட்டது. இந்த கட்சிக்கு 29% ஆதரவும், 26% எதிர்ப்பும் பதிவாகி இருந்தது. எனவே, கட்சியைத் தாண்டி மக்களின் ஆதரவைப் பெற்ற பிரதமராக ரிஷி சுனக் உள்ளார். பிரிட்டனின் நிதி நெருக்கடிக்கு தீர்வாக ரிஷி சுனக் செயல் ஆற்றுவார் என்ற நம்பிக்கை பெருகியுள்ளது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.