ஹவாய் காட்டுத்தீ காரணமாக 1,100 க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்று கூறப்படுகிறது.
ஹவாய் தீவான மவுய் பகுதியில் பயங்கர காட்டுத் தீ பரவியது. இந்த சம்பவத்தில் 115 பேர் இறந்தனர். இன்னமும் இந்த காட்டு தீ எரிகிறது. இந்நிலையில், இரண்டு வாரங்களுக்குப் பிறகும் குறைந்தது 1,100 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண குடும்ப உறுப்பினர்களின் உதவியை காவல்துறை நாடியுள்ளது.
சுமார் 12,000 மக்கள் வசிக்கும் சுற்றுலா நகரமான லஹைனா முழுவதுமாக தீயில் நாசமானது.
அதிகாரிகள் காணாமல் போனவர்களின் சரிபார்க்கப்பட்ட பட்டியலை அடுத்த சில நாட்களில் வெளியிடுவார்கள் என்று கூறப்படுகிறது. லஹைனாவில் காணப்படும் உடல்களை அடையாளம் காண டி.என்.ஏ பரிசோதனை நடத்தப்படுகிறது என்று மவுய் காவல்துறைத் தலைவர் ஜான் கூறினார்.
இதற்காக ஒரு பிரத்யேக தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.