அமெரிக்க கனடா எல்லை பகுதியில் உள்ள ஒரு சோதனை சாவடியில் கார் ஒன்று வெடித்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகே ரெயின்போ பாலம் உள்ளது. இந்த பாலம் ஒன்டோரியாவை நியூயார்க்குடன் இணைக்கும் நான்கு எல்லைகளில் ஒன்றாகும். இந்நிலையில் இங்கு அமைந்துள்ள சோதனை சாவடியில் கார் ஒன்று திடீரென வெடித்தது. இதில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்தை ஒரு பயங்கரவாத தாக்குதல் முயற்சி என்ற அடிப்படையில் எஸ்பிஐ விசாரித்து வருகின்றது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தை காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர் என்று நியூயார்க் கவர்னர் கேத்தி வலைதளத்தில் கூறியுள்ளார்.