எக்ஸ் தளத்தின் விளம்பர வருவாய் காசா மருத்துவமனைகளுக்கு அளிக்கப்படும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
கடந்த இரு மாதங்களாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே தீவிர போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரினால் எண்ணற்ற பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, எக்ஸ் தலைவர் எலான் மஸ்க், எக்ஸ் தளத்திற்கு, சந்தாதாரர்கள் மூலம் கிடைக்கும் வருவாய் மற்றும் விளம்பர வருவாய் ஆகியவற்றை அங்குள்ள மருத்துவமனைகளுக்கு நன்கொடையாக வழங்குவதாக தெரிவித்துள்ளார். பல்வேறு போர் குற்றங்கள் நிகழ்ந்து வரும் சூழலில், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பலர் தீவிர பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில், எலான் மஸ்கின் அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது.