மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, Systematic Investment Plan (SIP) - எஸ் ஐ பி முறையில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை மற்றும் முதலீட்டுத் தொகை கணிசமாக உயர்ந்து வருகிறது. நவம்பர் மாதத்தில் மட்டும், SIP மூலமாக ரூ. 25,320 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மியூச்சுவல் ஃபண்ட் கணக்குகளின் எண்ணிக்கை 10.22 கோடியாகவும், மொத்த முதலீட்டுத் தொகை ரூ. 39.7 லட்சம் கோடியாகவும் அதிகரித்துள்ளது. இதன் மூலம், மியூச்சுவல் ஃபண்ட் துறையில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவது, சில்லறை முதலீட்டாளர்கள் மத்தியில் மியூச்சுவல் ஃபண்ட் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளதை காட்டுகிறது.