மைசூரில் 414 ஆவது தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது.உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா விழா கர்நாடகாவில் கொண்டாடப்படும் வருகிறது. இது நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் சாமுண்டி மலையில் உள்ள காவல் தெய்வமான சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 24ஆம் தேதி ஜம்பு சவாரி எனப்படும் யானை ஊர்வலம் நடைபெற இருக்கிறது. தசரா விழா தொடங்கி உள்ளதால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. ஏராளமான மக்கள் கூட்டம் திரண்டு உள்ளதால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்கும் வகையில் மைசூர் நகரம் முழுவதும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.