விசித்திரமாக, செந்நிறத்தில் காட்சியளித்த லடாக் வானம் - இந்திய வானியல் ஆய்வகம் தகவல்

November 10, 2023

அரிதினும் அரிதாக, லடாக் பகுதியில் சிவப்பு நிறத்தில் வானம் காட்சி அளித்துள்ளது. இதனை இந்திய வானியல் ஆய்வகம் புகைப்படமாக பகிர்ந்துள்ளது. கடந்த நவம்பர் 3ம் தேதி, சூரியனிலிருந்து சக்தி வாய்ந்த கதிர்கள் வெளிப்பட்டன. இவை நவம்பர் 5ஆம் தேதி, பூமியின் காந்தப்புலத்தை தீவிரமாக தாக்கின. இதன் விளைவாக, உலகின் பல்வேறு பகுதிகளிலும் சிவப்பு நிற ஆரோராக்கள் தென்பட்டன. வாடா துருவ ஒளிகள் என்று அழைக்கப்படும் இவை, வடதுருவத்தில் இருந்து மிகவும் தொலைவாக அமைந்துள்ள லடாக் போன்ற பகுதியில் […]

அரிதினும் அரிதாக, லடாக் பகுதியில் சிவப்பு நிறத்தில் வானம் காட்சி அளித்துள்ளது. இதனை இந்திய வானியல் ஆய்வகம் புகைப்படமாக பகிர்ந்துள்ளது.
கடந்த நவம்பர் 3ம் தேதி, சூரியனிலிருந்து சக்தி வாய்ந்த கதிர்கள் வெளிப்பட்டன. இவை நவம்பர் 5ஆம் தேதி, பூமியின் காந்தப்புலத்தை தீவிரமாக தாக்கின. இதன் விளைவாக, உலகின் பல்வேறு பகுதிகளிலும் சிவப்பு நிற ஆரோராக்கள் தென்பட்டன. வாடா துருவ ஒளிகள் என்று அழைக்கப்படும் இவை, வடதுருவத்தில் இருந்து மிகவும் தொலைவாக அமைந்துள்ள லடாக் போன்ற பகுதியில் தென்பட்டுள்ளது மிகவும் அரிதான நிகழ்வாக சொல்லப்பட்டுள்ளது. இந்திய வான் இயற்பியல் அமைப்பு, லடாக் பகுதியில் அமைத்துள்ள தொலைநோக்கிகள் மற்றும் கேமராக்கள் மூலமாக இந்த நிகழ்வை படம் பிடித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu