நாகோர்னா கராபக் குடியரசு கலைக்கப்படுகிறது

September 29, 2023

அஜர்பைஜான் மற்றும் அர்மேனியா ஆகிய நாடுகளுக்கு இடையே நாகோர்னா கராபக் குடியரசு இருந்து வந்தது. தனி நாடாக இயங்கி வந்த இது கலைக்கப்படுவதாக அந்த பிராந்தியத்தை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி, நாகோர்னா கராபக் பகுதியில் நடந்த தாக்குதலில், அஜர்பைஜான் ராணுவம் அந்த பகுதியை கைப்பற்றியது. அர்மேனியா ராணுவம் தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளனர். அதன்படி, தனி குடியரசாக இயங்கி வந்த இந்த பகுதி கலைக்கப்படுகிறது. இது அஜர்பைஜான் உடன் இணைக்கப்பட உள்ளது. இதற்கான […]

அஜர்பைஜான் மற்றும் அர்மேனியா ஆகிய நாடுகளுக்கு இடையே நாகோர்னா கராபக் குடியரசு இருந்து வந்தது. தனி நாடாக இயங்கி வந்த இது கலைக்கப்படுவதாக அந்த பிராந்தியத்தை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி, நாகோர்னா கராபக் பகுதியில் நடந்த தாக்குதலில், அஜர்பைஜான் ராணுவம் அந்த பகுதியை கைப்பற்றியது. அர்மேனியா ராணுவம் தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளனர். அதன்படி, தனி குடியரசாக இயங்கி வந்த இந்த பகுதி கலைக்கப்படுகிறது. இது அஜர்பைஜான் உடன் இணைக்கப்பட உள்ளது. இதற்கான அரசாணையில் அந்த பிராந்தியத்தின் அதிபர் சாம்வெல் ஷாராமான்யன் கையெழுத்திட்டுள்ளார். வரும் ஜனவரி 1ம் தேதி முதல் குடியரசு கலைக்கப்பட உள்ளது. இந்த நிலையில், அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் ஆர்மேனியாவில் அகதிகளாக குடியேறி வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu