மும்பை ஐஐடிக்கு 315 கோடி நன்கொடை - நந்தன் நீலகேணி

இன்போசிஸ் நிறுவனத்தின் இணை தோற்றுநர் நந்தன் நீலகேணி, மும்பை ஐஐடிக்கு 315 கோடி ரூபாய் நன்கொடை வழங்குவதாக தெரிவித்துள்ளார். அவர் மும்பை ஐஐடியில் தனது பொறியியல் பட்டப்படிப்பை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர், கடந்த 1973 ஆம் ஆண்டு, பட்டப் படிப்பிற்காக மும்பை ஐஐடியில் இணைந்தார். தற்போது, மும்பை ஐஐடி உடனான தனது 50 ஆண்டுகால இணைப்பு நிறைவடைந்ததை ஒட்டி, ஒரு மாணவனாக இந்த நன்கொடையை வழங்குவதாக தெரிவித்துள்ளார். இது தவிர, மும்பை ஐஐடியின் ஆளுநர் நிர்வாக […]

இன்போசிஸ் நிறுவனத்தின் இணை தோற்றுநர் நந்தன் நீலகேணி, மும்பை ஐஐடிக்கு 315 கோடி ரூபாய் நன்கொடை வழங்குவதாக தெரிவித்துள்ளார். அவர் மும்பை ஐஐடியில் தனது பொறியியல் பட்டப்படிப்பை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர், கடந்த 1973 ஆம் ஆண்டு, பட்டப் படிப்பிற்காக மும்பை ஐஐடியில் இணைந்தார். தற்போது, மும்பை ஐஐடி உடனான தனது 50 ஆண்டுகால இணைப்பு நிறைவடைந்ததை ஒட்டி, ஒரு மாணவனாக இந்த நன்கொடையை வழங்குவதாக தெரிவித்துள்ளார். இது தவிர, மும்பை ஐஐடியின் ஆளுநர் நிர்வாக குழுவில் கடந்த 2011 முதல் 2015 வரை இவர் அங்கம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நந்தன் நீலகேணி, ஏற்கனவே மும்பை ஐஐடிக்கு 85 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி உள்ளார். எனவே, தற்போதைய தொகையையும் சேர்த்து, மொத்தமாக 400 கோடி ரூபாய் மும்பை ஐஐடிக்கு இவர் நன்கொடையாக வழங்கியுள்ளார். மும்பை ஐஐடி, அடுத்த 5 ஆண்டுகளில் 4106 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. அதன்படி, நந்தன் நீலகேணியின் நன்கொடை இந்த நிதி திரட்டலின் தொடக்கப் புள்ளியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu