நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் ஆர்டெமிஸ் திட்டம் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக முதலில் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர், இயன் சூறாவளியால், மேலும் தள்ளி வைக்கப்பட்டது. இறுதியாக, நவம்பர் 14ஆம் தேதி ஏவுவதற்கு தயாராக இருந்த நிலையில், நிக்கோலே புயல் குறித்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே, நிக்கோலே புயல் காரணமாக, ஆர்டெமிஸ் திட்டம், நவம்பர் 14 ஆம் தேதியில் இருந்து, நவம்பர் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.
ராக்கெட் ஏவுதளத்தில் இருந்தபடியே ஆர்டெமிஸ் ராக்கெட் இந்த புயலை எதிர்கொள்ளும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த ராக்கெட், 74.4 நாட் அளவிலான காற்றை தாங்கும் திறன் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நிக்கோலே புயலால் ஏற்படும் சூறாவளி, இந்த ராக்கெட்டை பாதிக்காது என்று கூறப்படுகிறது. எனினும், இது குறித்து ஆய்வு நடத்த, பிரத்தியேக குழு ஒன்று, கென்னடி ஸ்பேஸ் சென்டரில் பணியாற்றி வருவதாக நாசா அறிவித்துள்ளது.