விண்வெளியில் இருந்து திரும்பிய ஓரியன் விண்கலத்தில் ஆய்வுப் பணி - நாசா அறிவிப்பு

January 13, 2023

நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக, மனிதர்களை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஓரியன் விண்கலம், 25 நாட்கள் விண்வெளிப் பயணத்திற்கு பின்னர், கடந்த டிசம்பர் 11ஆம் தேதி பூமிக்கு திரும்பியது. இந்நிலையில், இந்த விண்கலத்தில், விஞ்ஞானிகள் குழு ஆய்வுப் பணி நடத்தி வருவதாக நாசா தெரிவித்துள்ளது. இது தொடர்பான புகைப்படம் ஒன்றையும் நாசா பகிர்ந்துள்ளது. ஓரியன் விண்கலத்தில் பொருத்தப்பட்டு இருந்த வெப்பம் தாங்கி, விண்கலம் மீண்டும் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் பொழுது, 5000 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பத்தை […]

நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக, மனிதர்களை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஓரியன் விண்கலம், 25 நாட்கள் விண்வெளிப் பயணத்திற்கு பின்னர், கடந்த டிசம்பர் 11ஆம் தேதி பூமிக்கு திரும்பியது. இந்நிலையில், இந்த விண்கலத்தில், விஞ்ஞானிகள் குழு ஆய்வுப் பணி நடத்தி வருவதாக நாசா தெரிவித்துள்ளது. இது தொடர்பான புகைப்படம் ஒன்றையும் நாசா பகிர்ந்துள்ளது.

ஓரியன் விண்கலத்தில் பொருத்தப்பட்டு இருந்த வெப்பம் தாங்கி, விண்கலம் மீண்டும் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் பொழுது, 5000 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பத்தை தாங்கி உள்ளது. இந்நிலையில், இந்த வெப்பம் தாங்கி, ஓரியன் விண்கலத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, அதன் திறன் சார்ந்து ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்படும் என நாசா தெரிவித்துள்ளது.

மேலும், “ஓரியன் விண்கலத்தில் உள்ள 5 ஏர்பேக்குகளின் திறனும் ஆய்வு செய்யப்படவுள்ளது. இதற்கு முன்னதாக, விண்கலத்திற்குள் உள்ள காற்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அதன் பின்னர் ஆய்வுகள் நடைபெறும்” என நாசா தெரிவித்துள்ளது. இந்த ஆய்வுப் பணிகள் ஆர்டெமிஸ் 2 திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu