உலகின் மிகப்பெரிய பறக்கும் ஆய்வகம் - நாசா அறிவிப்பு

February 9, 2024

காற்று மாசு காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், இதனை எதிர்த்து, துல்லியமான முன் அறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளை கொடுக்கும் அமைப்புகளை நாசா உருவாக்கி வருகிறது. அதன்படி, இந்த வாரம், பிலிப்பைன்சில் DC 8 என்ற ஆய்வகம் காற்றில் பறக்க உள்ளது. தரையில் இருந்து 15 மீட்டர் உயரம் வரை பறந்து சென்று, காற்றில் உள்ள நுண் பொருட்களை சேகரித்து ஆய்வு செய்ய உள்ளது. ஒரே தடவையில் 8 மணி நேரம் […]

காற்று மாசு காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், இதனை எதிர்த்து, துல்லியமான முன் அறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளை கொடுக்கும் அமைப்புகளை நாசா உருவாக்கி வருகிறது. அதன்படி, இந்த வாரம், பிலிப்பைன்சில் DC 8 என்ற ஆய்வகம் காற்றில் பறக்க உள்ளது. தரையில் இருந்து 15 மீட்டர் உயரம் வரை பறந்து சென்று, காற்றில் உள்ள நுண் பொருட்களை சேகரித்து ஆய்வு செய்ய உள்ளது. ஒரே தடவையில் 8 மணி நேரம் வரை பறக்கும் திறன் கொண்டதாக இது சொல்லப்பட்டுள்ளது. நாசா இந்த செய்தியை தெரிவித்துள்ளது.

நாசா தெரிவித்துள்ள இந்த செய்தியின் படி, உலகின் மிகப்பெரிய பறக்கும் ஆய்வகமாக டிசி 8 உள்ளது. இந்த ஆய்வுகளின் மூலம், காற்று மாசு எங்கெங்கு அதிக அளவு உயர்கிறது, எந்தெந்த பொருட்கள் மூலம் காற்று மாசு உயர்கிறது போன்ற துல்லியமான விவரங்கள் கிடைக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu