செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக இன்ஜினியூட்டி என்ற மினி ஹெலிகாப்டரை நாசா அனுப்பியுள்ளது. இதுவரை 72 முறை செவ்வாய் கிரகத்தில் பறந்து, இன்ஜினியூட்டி பல்வேறு தகவல்களை அனுப்பி உள்ளது. வேற்று கிரகத்தில் பறக்கும் முதல் கருவியாக இது அறியப்படுகிறது. மனிதர்களின் சாதனைக்கு உற்ற எடுத்துக்காட்டாக இருக்கும் இந்த கருவி, தனது பறக்கும் செயல்பாடுகளை நிறுத்த உள்ளது. ஆனால், தொடர்ந்து செவ்வாய் கிரக ஆய்வுகளில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக, செவ்வாய் கிரகத்தில் உள்ள இன்ஜினியூட்டி ஹெலிகாப்டர், பல்வேறு தகவல்களை பூமிக்கு அனுப்பியுள்ளது. கடந்த ஜனவரி 18ஆம் தேதி, தனது 72 வது பறக்கும் நடவடிக்கையை இது மேற்கொண்டது. அதன் போது, ஹெலிகாப்டரின் பிளேடுகளில் சேதம் ஏற்பட்டதாகவும், அது உடைந்து விட்டதாகவும் நாசா தெரிவித்துள்ளது. இதனால், இன்ஜினியூட்டியால் இனிமேல் பறக்கும் செயல்பாடுகளில் ஈடுபட முடியாது. ஆனாலும், இந்த ஹெலிகாப்டரின் சாதனைகள் அளப்பரியது. தொடர்ந்து செவ்வாய் கிரக ஆய்வுகளில் இது ஈடுபடும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.