வியாழன் கோளின் ஆராய்ச்சிக்காக ஜுனோ விண்கலத்தை நாசா அனுப்பியுள்ளது. இந்த விண்கலம் வியாழன் கோளில் தென்பட்ட மின்னல் ஒன்றின் புகைப்படத்தை அனுப்பியுள்ளது. கடந்த ஜூன் 16ஆம் தேதி, இந்த புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தில், வியாழன் கோளின் சுழல் பகுதியில் பச்சை வண்ண மின்னல் தென்படுவது தெளிவாக காட்டப்பட்டுள்ளது.
“பூமியை பொறுத்தவரை, பூமத்திய ரேகையின் மேலே நீர் நிரம்பிய மேகங்களில் இருந்து மின்னல்கள் தோன்றுகின்றன. அதுவே, வியாழன் கோளில், அம்மோனியா மற்றும் நீர் ஆகியவை நிறைந்த மேகங்களில் இருந்து மின்னல்கள் தோன்றுகின்றன. அவை பெரும்பாலும் வியாழன் கோளின் துருவப் பகுதிகளில் இருந்து தோன்றுகின்றன” - இவ்வாறு நாசா தெரிவித்துள்ளது. வியாழன் கோளில் எடுக்கப்பட்ட இந்த மின்னல் புகைப்படம் 2022 ஆம் ஆண்டு, கெவின் எம் கில் என்ற விஞ்ஞானியால் மேம்படுத்தப்பட்டதாகும். அத்துடன், ஜுனோ விண்கலம், வியாழன் கோளின் மிக நெருங்கிய சுற்றுவட்ட பாதையில் சென்ற போது, பல்வேறு புகைப்படங்களை எடுத்துள்ளதாகவும், அவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.