லிதுவேனியாவில் நேட்டோ உச்சிமாநாடு - சிறப்பு படைகளை அனுப்பும் போலந்து

July 5, 2023

வருகிற 11 மற்றும் 12-ந் தேதிகளில் லிதுவேனியா தலைநகர் வில்னியசில் நேட்டோ உச்சிமாநாடு நடைபெற உள்ளது. உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோ அமைப்பில் கொள்கையை அறிமுகப்படுத்தவும், புதிய உறுப்பினர்களை சேர்க்கவும் அவ்வப்போது நேட்டோ உச்சி மாநாடு நடத்தப்படுகிறது. அதன்படி வருகிற 11 மற்றும் 12-ந் தேதிகளில் லிதுவேனியா தலைநகர் வில்னியசில் நேட்டோ உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொள்வதால் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் லிதுவேனியா உள்ளது. […]

வருகிற 11 மற்றும் 12-ந் தேதிகளில் லிதுவேனியா தலைநகர் வில்னியசில் நேட்டோ உச்சிமாநாடு நடைபெற உள்ளது.

உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோ அமைப்பில் கொள்கையை அறிமுகப்படுத்தவும், புதிய உறுப்பினர்களை சேர்க்கவும் அவ்வப்போது நேட்டோ உச்சி மாநாடு நடத்தப்படுகிறது. அதன்படி வருகிற 11 மற்றும் 12-ந் தேதிகளில் லிதுவேனியா தலைநகர் வில்னியசில் நேட்டோ உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொள்வதால் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் லிதுவேனியா உள்ளது. எனவே வருகிற 17-ந் தேதி வரை அங்கு சிறப்பு படைகளை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தில் போலந்து அதிபர் ஆண்ட்ரேஜ் டுடா கையெழுத்திட்டுள்ளார். இந்த சிறப்பு படைப்பிரிவில் 75-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள், எம்.ஐ-17 ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை அடங்கும் என போலந்து அரசாங்கம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu