ஹரியானா மாநிலத்தின் முதல்வராக இருந்த மனோகர் லால் கட்டார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஜனநாயக ஜனதா கட்சி மற்றும் பாஜக இடையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் முறிவு ஏற்பட்டுள்ளது. . இதன் காரணமாக, மனோகர் லால் கட்டார் விரைவில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் தனியாக போட்டியிட உள்ளார். இதனால் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். மேலும், அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர்களும் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இந்நிலையில் ஹரியானா மாநில முதல்வராக நயாப் சைனி பதவியேற்க உள்ளார் என பாஜக அறிவித்துள்ளது.