நெல்லையைச் சேர்ந்த மாணவர் முகுந்த் பிரதீஷ் அகில இந்திய அளவில் ஜே.இ.இ தேர்வில் முதலிடம் பிடித்துள்ளார்.
ஜே.இ.இ எனப்படும் நுழைவு தேர்வு நாட்டில் உள்ள ஐஐடி என்ஐடி போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக நடத்தப்பட்டு வருகிறது. இதன் தேர்வு கடந்த மாதம் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் உள்ள 290 நகரங்களில் இருந்து 11 லட்சத்து 70 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார் இதன் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் முகுந்த் பிரதீஷ் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். தேர்வு எழுதிய 11 லட்சம் மாணவர்களில் 23 மாணவர்கள் 300 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் எடுத்துள்ளனர். அதில் முகுந்த் பிரதீஷும் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.