தனாஹுன் மாவட்டத்தில் இந்தியர்கள் உள்பட 40 பேருடன் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்தது.
நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில், பொக்ரா முதல் காத்மாண்டு செல்லும் வழியில் பயணித்த பேருந்து, மார்ஸ்யாங்டி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் முதற்கட்டமாக 14 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது, ஆனால் பின்னர் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது. பிரதமர் மோடி, உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்குவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, பிரதமர் மோடியின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.