நேபாளத்தில் ஆற்றில் அடித்த செல்லப்பட்ட இரண்டு பேருந்துகளில் 65 பேர் மாயமாகினர்.
நேபாளத்தில் இன்று அதிகாலை நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் சுமார் 65 பயணிகளுடன் சென்ற இரண்டு பேருந்துகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. இந்த சம்பவத்தில் ஏழு இந்தியர்களும் மாயமாகியுள்ளனர் என்று தகவல் வந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கிய பேருந்துகளில் ஒன்று காட்மண்டு சென்று கொண்டிருந்த ஏஞ்சல் பேருந்து ஆகும். அதில் 24 பயணிகள் இருந்தனர். மற்றொரு பேருந்து காட்மண்டுவில் இருந்து ரவுதஹத் அருகே கவுர் பகுதிக்கு வந்து கொண்டிருந்தது. இதில் 41 பயணிகள் இருந்தனர். காட்மண்டு வந்து கொண்டிருந்த பேருந்தில் 21 பயணிகளில் ஏழு பேர் இந்தியர்கள். மத்திய நேபாள பகுதியில் திரிசூலி நதி ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் அதன் கரை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு அதன் காரணமாக அருகில் இருந்த நெடுஞ்சாலையில் சென்ற பேருந்துகள் ஆற்றில் கவிழ்ந்தது என்று கூறப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3 மணி அளவில் இந்த விபத்து நடந்தது.
சிட்வான் மாவட்டம் முக்லிங் சாலையில் சென்று கொண்டிருந்தபோது பேருந்துகள் ஆற்றுக்குள் நிலச்சரிவு காரணமாக விழுந்தன என்பது முதல் கட்ட விசாரணை தெரிய வந்துள்ளது. நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு பேருந்துகளிலும் பேருந்து ஓட்டுநர்கள் உட்பட 65 பயணிகள் இருந்துள்ளனர்.