நேபாள துணை பிரதமர் உபேந்திர யாதவ் ராஜினாமா

May 14, 2024

நேபாள துணை பிரதமர் உபேந்திர யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நேபாள துணை பிரதமராக இருந்த ஜே எஸ் பி நேபாள கட்சியின் தலைவர் உபேந்திரா யாதவ் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். அதோடு அவர் அரசுக்கு அளித்து வந்த கட்சி ஆதரவையும் வாபஸ் பெற்றுள்ளார். இவருடைய கட்சி கூட்டணியில் இருந்து விலகி இருந்தாலும் பிரதமர் புஷ்பகமல் தஹால் பிரசன்னாவின் ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இவருடைய கட்சி 12 எம் பிக்களைக் […]

நேபாள துணை பிரதமர் உபேந்திர யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

நேபாள துணை பிரதமராக இருந்த ஜே எஸ் பி நேபாள கட்சியின் தலைவர் உபேந்திரா யாதவ் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். அதோடு அவர் அரசுக்கு அளித்து வந்த கட்சி ஆதரவையும் வாபஸ் பெற்றுள்ளார். இவருடைய கட்சி கூட்டணியில் இருந்து விலகி இருந்தாலும் பிரதமர் புஷ்பகமல் தஹால் பிரசன்னாவின் ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இவருடைய கட்சி 12 எம் பிக்களைக் கொண்டது. இப்பொழுது இந்த கட்சி விலகி இருப்பதால் அரசின் நிலைத்தன்மை குறைந்துள்ளது என்று பரவலாக கருதப்படுகிறது. ஜே எஸ் பி கட்சியில் உட்கட்சி பிரச்சினை காரணமாக கட்சி இரண்டாக உடைந்தது. யாதவ் ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் இன்று வழங்கினார் அவருடன் அவர் கட்சியை சேர்ந்த வனத்துறை மந்திரி தீபக் கார்கியும் ராஜினாமா செய்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu