இஸ்ரேல் பாதுகாப்புத்துறை மந்திரி யோவ் காலண்ட் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இந்த நடவடிக்கை மேற்கொண்டார். இதன் பின்னர், இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி காட்ஸ், பாதுகாப்புத்துறை மந்திரியாக பதவியேற்க உள்ளதாகவும், கிதியோன் வெளியுறவுத்துறை மந்திரியாக நியமிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நெதன்யாகு வெளியிட்டுள்ள அறிக்கையில், "போரின் ஆரம்பத்தில் காலண்டின் நடவடிக்கைகள் நல்ல பலன்கள் கொடுத்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக அவர் செயல்பாடுகள் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை." என்று கூறியுள்ளார். பதவிநீக்கத்திற்கு பிறகு, யோவ் காலண்ட் 'எக்ஸ்' தளத்தில், "இஸ்ரேலின் பாதுகாப்பு எப்போதும் எனது முக்கியமான லட்சியம்" என்று பதிவிட்டுள்ளார்.