சீன அச்சுறுத்தலை சமாளிக்க லடாக்கில் புதிய விமான ஓடுதளம்

October 28, 2022

சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்கும் வகையில், கிழக்கு லடாக்கில் எல்லையை ஒட்டியுள்ள நியோமா விமானப் படை தளத்தில், போர் விமானங்கள் தரையிறங்கும் வகையில் புதிய ஓடுதளம் அமைக்கப்படுகிறது. நம் அண்டை நாடான சீனா, கிழக்கு லடாக் பகுதிக்குள் 2020ல் அத்துமீறி நுழைய முயன்றது. இதையடுத்து மோதல் ஏற்பட்டதால் எல்லையில் இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான இடங்களில் இருந்து படைகள் திரும்பப் பெறப்பட்டாலும், சில இடங்களில் தொடர்ந்து நிலை நிறுத்தப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால் உடனடியாக படைகளை […]

சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்கும் வகையில், கிழக்கு லடாக்கில் எல்லையை ஒட்டியுள்ள நியோமா விமானப் படை தளத்தில், போர் விமானங்கள் தரையிறங்கும் வகையில் புதிய ஓடுதளம் அமைக்கப்படுகிறது.

நம் அண்டை நாடான சீனா, கிழக்கு லடாக் பகுதிக்குள் 2020ல் அத்துமீறி நுழைய முயன்றது. இதையடுத்து மோதல் ஏற்பட்டதால் எல்லையில் இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான இடங்களில் இருந்து படைகள் திரும்பப் பெறப்பட்டாலும், சில இடங்களில் தொடர்ந்து நிலை நிறுத்தப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால் உடனடியாக படைகளை எல்லைக்கு அனுப்புவதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை மத்திய அரசு செய்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கிழக்கு லடாக்கின் நியோமா விமானப் படை தளத்தை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சீனாவுடனான மோதலின்போது, நம் படைகளை உடனடியாக அனுப்புவதற்கும், பொருட்களை அனுப்புவதற்கும் இந்த விமானப் படை தளம் பயன்படும்.

சீனாவுடனான எல்லையில் இருந்து 50 கி.மீ., தொலைவில் இந்த விமானப் படை தளம் அமைந்துள்ளது. போர் விமானங்கள் தரையிறங்கும் வகையில் விமானப் படை தளத்தில் புதிய ஓடுதளப் பாதை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எல்லை சாலை அமைப்பின் வாயிலாக இந்தப் பணி விரைவில் துவங்க உள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu