சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை 31-ந்தேதி கொண்டாடப்பட இருப்பதால், சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணத்துக்காக ஆயத்தமடைந்துள்ளனர். மேலும் சென்னையிலிருந்து 29 மற்றும் 30-ந்தேதிகளில் அதிகமான வாகனங்கள் செல்ல வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், அதிக அளவில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதால் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே இதற்கேற்ப, வாகன நெரிசல் ஏற்படும் போது கட்டணங்களை இலவசமாக அனுமதிக்க உத்தரவு வழங்கப்படவுள்ளதாக சுங்கச்சாவடி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் கட்டணம் இல்லாமல் அனுமதிக்க உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது.