சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அடித்தள நாளை முன்னிட்டு டிசம்பர் மூன்றாம் தேதி புதிய சலுகையை மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பொது மக்களின் அதிநவீன போக்குவரத்து முறையாகவும் அத்தியாவசிய போக்குவரத்து சேவையாகவும் இயங்கி வருகிறது. இந்த சேவை தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் துவங்கி தற்போது பல்வேறு பகுதிகளில் விரிவாக்கம் செய்யப்பட்டும் வருகிறது. இந்நிறுவனம் அவ்வப்போது சில சலுகைகளையும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் டிசம்பர் மூன்றாம் தேதி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அடித்தள நாளை முன்னிட்டு ரூபாய் ஐந்து கட்டணத்தில் பொதுமக்கள் பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளது. ஆனால் அதற்கு ஒரு நிபந்தனையும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாடிக் கியூ ஆர், பே டி எம், போன்பே மூலம் பெறும் டிக்கெட்டுகளுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும் என அறிவித்துள்ளது.